Saturday 18th of May 2024 01:02:57 PM GMT

LANGUAGE - TAMIL
.
சீரற்ற காலநிலை: முல்லைத்தீவில் 18 குடும்பங்கள் பாதிப்பு, இரு வீடுகள் பகுதியளவில் சேதம்!

சீரற்ற காலநிலை: முல்லைத்தீவில் 18 குடும்பங்கள் பாதிப்பு, இரு வீடுகள் பகுதியளவில் சேதம்!


மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 18 குடும்பங்களை சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய புள்ளி விபர தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று (ஜன-12) மதியம் 12 மணிவரை சேகரிக்கப்பட்ட தகவலிற்கு அமைவாக சீரற்ற வானிலை காரணமாக கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 18 குடும்பங்களை சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதேவேளை முள்ளியவளை மேற்கு கிராம சேவகர் பிரிவில் இரு வீடுகள் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பாரிய மரங்கள் ஆங்காங்கே முறிந்தும், பாறியும் விழுந்துள்ளன. இதனால் சில இடங்களில் வீதிப் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE